யு.ஐ.டி.ஏ.ஐ பற்றி

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும். ஆதார் சட்டம் 2016 ஆதார் மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2019 (14 of 2019) w.e.f 25.07.2019

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கு “ஆதார்” என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் (UID) வழங்குவது என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பால் வழங்கப்படும் ஆதார் எண் (அ) இரட்டைப் பதிவு மற்றும் போலி அடையாளங்களை நீக்கும் அளவுக்கு வலிமையாக இருக்க வேண்டும்(ஆ) எளிமையாகவும், குறைந்த செலவிலும் சரிபார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். 31 மார்ச் 21 நிலவரப்படி இந்தியாவின் குடியிருப்பாளர்களுக்கு 128.99 கோடி பேருக்கு, ஆணையம் ஆதார் எண் வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டப்படி, ஆதாரின் வாழ்க்கை சூழற்சியின் அனைத்து நிலைகளிலும் இயக்குதல் மற்றும் மேலாண்மை செய்தல் உட்பட ஆதார் பதிவு மற்றும் சரிபார்ப்பு, தனிநபர்களுக்கு ஆதார் எண்களை வழங்குதல் மற்றும் சரிபார்ப்புகளை மேற்கொள்வதற்கான கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்பு முறையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பொறுப்பு ஆகும். அதுமட்டுமின்றி, தனிநபர்களின் அடையாளத் தகவல்கள் மற்றும் சரிபார்ப்பு ஆவணங்களை உறுதி செய்வதும் ஆணையத்தின் பணியாகும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இணையதளத்தில் நிறுவன அமைப்பு பிரிவுகளைப் பார்வையிடவும்.

வரலாற்று பின்னணி

மார்ச் 03, 2006 அன்று, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், BPL குடும்பங்களுக்கான தனித்துவமான அடையாளம் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, BPL குடும்பங்களுக்கான தனித்துவ அடையாளத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய முக்கிய தரவுத்தளத்திலிருந்து தரவு மற்றும் விவரங்களை புதுப்பித்தல், மாற்றம், சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான செயல்முறையை பரிந்துரைப்பதற்காக 2006 ஜூலை 03 அன்று ஒரு செயல்முறை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, நவம்பர் 26, 2006 அன்று, 'குடியிருப்பாளர்களின் தனித்துவமான அடையாளம்' எனப்படும் ஒன்றை தயாரித்தது. அதன் அடிப்படையில், குடியுரிமைச் சட்டம், 1955 ன் கீழ் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தனித்துவ அடையாள எண் திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு (EGoM) டிசம்பர் 04, 2006 அன்று அமைக்கப்பட்டது.

ஒரு சட்டபூர்வ அதிகாரமாக நிறுவப்படுவதற்கு முன்பு, UIDAI ஆனது அப்போதைய திட்டமிடல் ஆணையத்தின் (இப்போது NITI ஆயோக்) இணைக்கப்பட்ட அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அரசிதழ் அறிவிப்பு எண்- A-43011/02/2009-Admn.I) 28 ஜனவரி 2009 தேதியிட்டது. முதல் UID எண் 29 செப்டம்பர் 2010 அன்று மகாராஷ்டிராவின் நந்தூர்பார் குடியிருப்பாளருக்கு வழங்கப்பட்டது. 12 செப்டம்பர் 2015 அன்று, UIDAI யை அப்போதைய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை (DeitY) உடன் இணைக்க வணிக விதிகளின் ஒதுக்கீட்டை அரசாங்கம் திருத்தியது.