வசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்?

ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி வசிப்பாளரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளும். வசிப்பாளரின் விருப்பப்படி, அவரிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் அவரது விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு செய்யும்.